திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது  பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து  (18.07.2023) நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான உயர்திரு. R.N ரவி, அவர்கள், சிறப்பு விருந்தினர் உயர்திரு. பிபேக் டெப்ராய்அவர்கள், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. என் சந்திரசேகர் பல்கலைக்கழக பதிவாளர் திரு.சாக்ரடிஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

பின்னர், பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் உயர்திரு. பிபேக் டெப்ராய் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு. R.N ரவி அவர்கள் விழாவின் தலைமையேற்று 1053 மாணவர்களுக்கு பட்டங்களை அளித்தார்கள். விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.