தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில்தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்ககலைஞர் மகளிர் உரிமை திட்டத்தைதுவக்கி வைத்துஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதமிழ்நாட்டின் மாண்புமிகுமுதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான தளபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றஉறுப்பினர்கள் கூட்டம் நன்றியைபாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளைபொருட்படுத்தாமல்மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம்விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவேமாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறுகர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் எனக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஒன்றியத்தில் பா... அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம்அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல்இரண்டாவது கட்டசென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில்வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு  தடைக்கல்லைஏற்படுத்தி வருகிறது.

பா... ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறைஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும்ஒன்றிய அரசு அந்தமசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும்மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்துநாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி – “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தைபேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும்சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல்காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பா... அரசுமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இன்று அவர் வழியில்செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறைகோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா... அரசு தயாராக இல்லை. எனவே இந்தசிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம்அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம்முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக சமூகநீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம்இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்”, “அரசுதுறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”, “தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்தவேண்டும்”,  “உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம்கொடுக்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளோடுஇடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்புநீக்கப்படும்மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்றவலியுறுத்துவோம்.

ஒன்றிய பா... அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டவிஸ்வகர்மா யோஜானாதிட்டம், குலத் தொழிலைஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களைகல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை  தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச்செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சிஇத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள்குரலெழுப்புவார்கள்.

 எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா... அரசு, தற்போதுஇந்தியாகூட்டணிக்கு அஞ்சிபாரத்என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா... அரசை, நாடாளுமன்றத்தில்இந்தியாகூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்தியஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.