சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.9.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் வழங்கிடும் அடையாளமாக 10பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையால் 1989-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழுத் திட்டம் பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு, ஏழை எளிய மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு முன்னோடியாக விளங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.22 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களில் சுமார் 1 கோடியே 6 இலட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள 8,210  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.15,000/-  வீதம்  ரூ.12.32 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி, ஊரகப் பகுதியில் உள்ள 8,776 ஏழை எளிய நலிவுற்றவர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி, சுய உதவிக் குழு ஒன்றுக்கு தலா ரூ.50,000/- வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி, ஊட்டச் சத்து தோட்டம் அமைக்க 1,27,903 சுய உதவிக் குழு மகளிர்க்கு  ரூ.64 இலட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்திட தலா 100 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 3,936 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவிபால் உற்பத்தியை பெருக்குவதற்கு ஏதுவாக அசோலா தீவன உற்பத்தி செய்திட 4,043 மகளிருக்கு ரூ.2.02 கோடி நிதியுதவி,  186 ஆடு வளர்ப்பு வங்கிகள் அமைத்திட ரூ.1.86 கோடி நிதியுதவி, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு குறைந்த கட்டணத்தில் கருவிகளை வாடகைக்கு வழங்கும்  வேளாண் கருவிகள் வங்கி அமைக்க 1,427 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.61 கோடி நிதியுதவி3,000 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தளவாடங்கள், சிறிய இயந்திரங்கள், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மூலதன நிதி ஆகியவற்றிற்காக ரூ.4.82 கோடி நிதியுதவி;  தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களை குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்,  உபரி விளைபொருட்களைத் திரட்டவும், 183 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.75,000/- வீதம்  ரூ.1.37 கோடி ரூபாய் திட்ட துவக்க நிதியுதவி, நுண் தொழில் நிறுவன நிதியாக 569 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி ரூபாய் நிதியுதவி; வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 10,714 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.464.16 கோடி வங்கிக் கடன், 73 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.22.16 கோடி ங்கி பெருங்கடன், 45 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு கடன் உத்தரவாத நிதியாக ரூ.5.24 கோடி நிதியுதவிநகர்ப்புறத்தில் உள்ள 590 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.10,000/- வீதம் ரூ.59 இலட்சம்சுழல்நிதி, 151 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.76 இலட்சம் சுழல்நிதிசுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 985  நபர்களுக்கு ரூ.4.98 கோடி, 528 தொழில் குழுக்களுக்கு ரூ.23.36 கோடி, 76 ஒத்த விருப்பக் குழுக்களுக்கு ரூ.70 இலட்சம், 1,470 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.85 கோடி மற்றும் 43 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.65 இலட்சம் தொழில் துவங்கிட வங்கிக் கடன்; என மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பயனாளிகளுக்கு வழங்கினார். ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தர 18,000 இளைஞர்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் மூலம் தொழில் திறன் பயிற்சிள் வழங்கப்படும்இந்த நிதியாண்டில் 1000 கிராம ஊராட்சிகளில் உள்ள 18,000 இளைஞர்களுக்கு வெல்டிங், எலெக்ட்ரிசியன், பிளம்பர், மண்பாண்டம், தையல், உணவு பதப்படுத்துதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் போன்ற தொழில் திறன் பயிற்சிகள் வழங்கிடும் வகையில், மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 சமுதாய திறன் பள்ளிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றுதொடங்கி வைத்து, இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து தொழில் செய்வதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய தொழில் திறன் பயிற்சி பெட்டகத்தை ஒரு இளைஞருக்கு வழங்கினார். உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்கவும், உற்பத்தி செலவைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்குவதற்கும் உரிய பயிற்சிகள் வழங்கிட, 2000 சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் துவங்கப்படும், அதில் 74,000 உற்பத்தியாளர்களுக்கு மண், நிலத்தடி நீர் பரிசோதனை, இயற்கை உரம் பயன்பாடு, நுண்ணீர் பாசனம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இந்த சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் 30 முதல் 50 உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் பயன்பெறுவர். அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 சமுதாயப் பண்ணைப் பள்ளிகளை இன்று தொடங்கி வைத்து, இவர்கள் அனைவரும் பண்ணைப் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய பண்ணைப் பயிற்சி பெட்டகத்தை ஒரு சமுதாயப் பண்ணைப் பள்ளிக்கு வழங்கினார்.  மேலும், தீன்தயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்பு பயிற்சி பெற்ற ஊரகப் பகுதியைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 50 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய பணி அமர்வு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஒரு இளைஞருக்கு பணி அமர்வு ஆணையினை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை  இயக்குநர் திருமதி. ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு. பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.