*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி  வந்த திரு. ஆ.யுவராஜ் பிரபாகரன்  ( வயது 33)  28-02-2021 அன்று அதிகாலை  சென்னையில்  நடந்த சாலை விபத்தில்  மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய  திரு. யுவராஜ் பிரபாகரன்  இளம் வயதில்  சாலைவிபத்தில் பலியானது  பெரும் வேதனை தருகிறது. திரு. யுவராஜ் பிரபாகரன்  மறைவுக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
திரு. யுவராஜ் பிரபாகரனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,  உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்  சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரும் வேதனையைத் தருகிற இந்த சூழலில் இரங்கல் செய்தியில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஓர் உயிரிழப்பு என்பது ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் எத்தனைப் பெரிய துயரத்திற்கும் இழப்பிற்கும் ஆளாக்கி விடுகிறது. சாலை பயனத்தின் போதும் கூடுதல் கவனம் தேவை. 

ஆழ்ந்த துயரங்களுடன்
பாரதிதமிழன்,
இணைச் செயலாளர்,
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*