சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்

27-04-2022  புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர்
2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.  தீ விபத்து சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து கொண்டிருந்த  ஜோதி ராமலிங்கம்( தி இந்து புகைப்படக் கலைஞர்) சிவா( தினகரன் புகைப்படக் கலைஞர்) பிரதாப் ( டைம்ஸ் ஆஃப் இந்தியா புகைப்பட கலைஞர் ) அஸ்வின் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்) விஜி ( தினமலர் சி.என்.எஸ் புகைப்பட கலைஞர் ) *சண்முக சுந்தரம் ( தினத்தந்தி புகைப்பட கலைஞர்) சத்தியசீலன் ( தினமலர் புகைப்படக் கலைஞர் ) குமரேசன் ( நக்கீரன் புகைப்படக் கலைஞர்) முருகேசன்( புதிய தலைமுறை செய்தியாளர்) *பிரமோத் ( இந்தியா டுடே செய்தியாளர் ) சுகுமார் ( இந்தியா டுடே ஒளிப்பதிவாளர் ) ஐயப்பன் ( புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்) உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் களத்தில் இறங்கி நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

ஒரு பக்கம் செய்தி சேகரிக்கும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டே மனித நேயத்துடன் செயல்பட்ட பத்திரிகை, ஊடக உறவுகளின் சேவை பொதுமக்கள் மத்தியில் பத்திரிகை உலகிற்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளது. நோயாளிகளுக்கு மனித நேயத்துடன் உதவிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை சங்கத்தின் சார்பாக இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்தார்.***********

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்