ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில்; (24.01.2024) வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  கோ.கோபு தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 03 பயனாளிகளுக்கு ரூ.54,000மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை 04 பயனாளிகளுக்கு ரூ.48,000மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை 04 பயனாளிகளுக்கு ரூ.48,000மதிப்பீட்டிலும், இலவச வீட்டு மனை பட்டா 02 பயனாளிகளுக்கு ரூ.20,000மதிப்பீட்டிலும், முழுப்புலம்பட்டா 04 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 04 பயனாளிகளுக்கு ரூ.21,269ஃரூ மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் 02 பயனாளிகளுக்கு ரூ.4,150மதிப்பீட்டிலும், உளுந்து சான்றுவிதைகள் 02 பயனாளிகளுக்கு ரூ.800மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் விசை த்தெளிப்பான் கருவிகள் 01 பயனாளிகளுக்கு ரூ.21,736மதிப்பீட்டிலும், பழமரத்தொகுப்பு 04 பயனாளிகளுக்கு ரூ.600மதிப்பீட்டிலும், சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள்பாதுகாப்புத் திட்டம் 16 பயனாளிகளுக்கு ரூ.8,00,000இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.10,18,555இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய்கோட்டாட்சியர் திரு.கோ.கோபு அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.ராதிகா பிரபு  மாவட்ட தாட்கோ மேலாளர் வே.தியாகராஜன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஆர்.எஸ்மங்கலம் வட்டாட்சியர்  சாமிநாதன்  தும்படைக்காகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.