பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல்

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ்  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை  அனுமதி அளித்துள்ளதாக மத்திய இணையமைச்சர்  டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை …

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல் Read More

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு

இந்தியாவின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தேசிய மதிப்பை நிலை நாட்டவும் அவற்றின் பெருமைகளை இளைஞர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். …

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் நாக்பூரில் இயங்கும் தேசியசுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), கொவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில்வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத்தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையிலும், சௌகரியமாகவும் இருப்பதுடன்,  முடிவுகள் உடனடியாகவும்கிடைக்கப்பெறுகிறது. குறைந்த அளவிலானஉள்கட்டமைப்பு வசதிகளே தேவைப்படுவதால் ஊரக மற்றும்பழங்குடி பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகபயனளிக்கும்.சிஎஸ்ஐஆர்– தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிநிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு, நாட்டிற்கு சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்திடம் இந்தத் தொழில்நுட்பம்வழங்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப்புவணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும்பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளைஉள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, “உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர்பரிசோதனை செய்யும் முறையை,  நாடு முழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடிபகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவானமற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள்செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமதுபோராட்டமும் வலுப்பெறும். உப்புத் தண்ணீரில் வாய்கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையை வணிக ரீதியாக மாற்றுவது தொடர்பாக குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு, சிஎஸ்ஐஆர்–தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைஅணுகியது”, என்று கூறினார்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி Read More

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார்

பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்குமுக்கியத்துவம் தர வேண்டும்.  பெண்கள் படிக்கவே கூடாதுஎன்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில்மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும்காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்டபுதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்குகடுமையாக உழைப்பதோடு  உரிமைக்கு அஞ்சாமல் குரல்எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிடபெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.  ஒப்பீட்டு அளவில்புதுச்சேரியில் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும்திருப்திகரமாக உள்ளன.  பெண்களின் உரிமைகள் குறித்துஆன்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவிகள் தங்கள் வீடுகளில்உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.  இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில்நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடுசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள்குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்றவேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி–விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத்மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்–செயலருமானதிரு.செ,உதயகுமார் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்துநடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின்ஒரு பகுதியாக நடத்தப்பட்ட  ஆன்லைன் பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில்28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்தியஅகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும்புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணுமற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர்க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுபரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசைசி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ்.ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர்திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன்மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார் Read More

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள்

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,  சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது.  அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு

சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். “இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கி,  நாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக …

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு Read More

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியமில்லை என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய டாக்டர் திரேன் குப்தா, “எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு …

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல் Read More

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர்

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் என்ற வெப்ப மண்டல ஒட்டுண்ணி நோய்க்கு 90 சதவீதம் சிறப்பான சிகிச்சையளிக்கும்,  எளிதான, விலை குறைவான, வைட்டமின் பி12, பூசப்பட்ட மிகச் சிறிய ரக வாய்வழி உயிரி மருந்தை  இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (INST) டாக்டர் …

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர் Read More

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம்

இந்திய நாடே கோலாகலமாக கொண்டாடும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கும் மக்கள் நம் தேசியக் கோடியை ஏற்றுவதும், சிறிய வடிவ கொடியை சட்டையில் குத்திக்கொண்டும் வலம் வருவார்கள். வீதியெங்கும் இந்திய கொடி விற்கப்படும் இந்நேரத்தில், மூவர்ண இந்திய கொடியை தயாரிக்கும் …

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம் Read More

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய …

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் Read More