வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘வெள்ளையனே வெளியேறு இயக்க ஆண்டுவிழா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை …

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து Read More

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள்

உள்ளூர் கலைப்பொருட்களை வளர்க்கவும் அவற்றைபிரபலப்படுத்தவும் ஓர் சிறந்த நினைவூட்டியாக கைத்தறி தினம்கொண்டாடப்படுகிறது. பல்வேறு சந்ததியினரிடையேவரவேற்பைப் பெறுவதற்காக தரத்தை மேலும் வலுப்படுத்துவதில்கைத்தறித் துறையும் அது சம்பந்தமான ஊரக கலைப் பொருட்கள்துறையும் கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களுக்குநுகர்வோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதால், தர மேம்பாடு, காலத்தின்கட்டாயமாகியுள்ளது.” ‘தேசிய கைத்தறி தினம்’ என்ற தலைப்பில்மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள்தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்தஇணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில்காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவுபேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர் சீரங்கராஜன் கூறினார். நெசவுக்கு முந்தைய செயல்முறைகள் மற்றும் தறிஉபகரணங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துமாறு அவர்வலியுறுத்தினார். இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுஅதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்குஉணரி போன்ற தொழில்நுட்பங்களால், ஏதேனும் இடர்பாடுகள்எழும்போது, தானியங்கியாக நெசவாளர்களுக்கு தகவல்அளிக்கப்படுவதன் மூலம் அது போன்ற பிரச்சினைகளை சுலபமாகஎதிர்கொள்ளலாம். சாயத்தின் செயல்முறைகளில் நிலையானவழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  தேசிய கைத்தறி மேம்பாட்டுக்கழகத்தின் மூத்த அதிகாரி திரு விஜய் பிரதாப் கௌதம்பேசுகையில், இதே தினத்தன்று தொடங்கப்பட்ட சுதேசிஇயக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுவதாகக்கூறினார். கைத்தறி பொருட்கள் பற்றி மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உள்ளூர் பொருட்களின் பயன்பாடுமற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பது தான் சுதேசி இயக்கத்தின்முக்கிய நோக்கம். அடிமட்ட அளவில் கைத்தறி துறையில்சேவைகளை அளிப்பதற்காக கைத்தறி அலுவலகங்களும் அதன்கிளைகளும் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெசவுத் தொழிலில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதிருவண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளிதிரு பி. தனசேகரன், தமது குடும்பம் மூன்று தலைமுறைகளாகஇந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெருந்தொற்றுகாலகட்டத்தில் பிற துறைகளைப் போல நெசவுத் தொழிலிலும்கொவிட் தொற்றின் தாக்கம் பெரிதும் காணப்பட்டதாக அவர்தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்புஉள்ளிட்ட பிரச்சினைகளை நெசவாளிகள் சந்தித்தனர். ஆரணியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆரணியில் சுமார்ஒரு லட்சம் நெசவாளிகள் வசிப்பதால் இந்த முன்முயற்சி சந்தைஉள்ளிட்ட துறைகளில் பேருதவியாக இருக்கும். கோரா, ஜரிபோன்ற பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமானவிலைகளில் நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டார். இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்தியசென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருஜே. காமராஜ், மகாத்மா காந்தி, கைத்தறியை ஏழ்மையை ஒழிக்கும்முக்கிய கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், ஆங்கிலேயர்களுக்குஎதிரான மாபெரும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, அதில் வெற்றியும்கண்டார் என்று தெரிவித்தார். கைத்தறி உள்ளிட்ட உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்கொள்கையின் அடிப்படையில் தற்சார்பு இந்தியா திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நல்வாழ்விற்காக பிரதமர்திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தேசிய கைத்தறிதினத்தன்று காதி மற்றும் இதர ஊரகத் தொழில்துறைகளின்பொருட்களை வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின்வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்போம் என்று அனைவரும் உறுதிஏற்போம் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின்துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி திருமிகுவித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார்.

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள் Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக …

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார். Read More

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

விண்கலங்கள் போன்றவற்றில் உள்ள பழுதடைந்த மின்னணு உபகரணங்கள் தங்களை தாங்களே சரிசெய்து கொள்ள வைக்கும் புதிய பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் இயந்திர பாதிப்பின் காரணமாக அவ்வப்போது செயலிழந்து, அவற்றை நாம் செப்பனிடவோ, மாற்றவோ வைக்கின்றன. …

இயந்திர பாதிப்புகளை தானே சரிசெய்து கொள்ளும் பொருட்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்–என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியானஅனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்துபிற்பகல் 12.45 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு ஆயவகம், டிஆர்டிஓ–வின் இதரஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையைதயாரித்துள்ளது. இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள்இன்றைய சோதனையை நேரில் கண்டனர். சோதனை தரவுகளை சேகரிப்பதற்காக பல்வேறு முறைகள்கையாளப்பட்டன. ஏவுகணையின் சிறப்பான செயல்பாடுஇவை அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது. வான் ரீதியான அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை ஏவுகணைவெளிப்படுத்தியது. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன்வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்–என்ஜி–யின்செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ்லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்றஉற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன. டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத்டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும்தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காகபாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.  குழுவின் முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓதலைவர், இந்திய விமானப்படைக்கு இந்த ஏவுகணைவலுவூட்டும் என்றார்.

தரையில் இருந்து வான் இலக்குகளைதாக்கக்கூடிய ஆகாஷ்-என்ஜி ஏவுகணையைடிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது Read More

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

*மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை …

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! Read More

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். மத்திய இளைஞர் …

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார் Read More

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு

மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலஅரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துமத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் இன்றுஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்குவங்கத்தில்  கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதரசுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தைவிதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள்தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை; முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப்பின்பற்றுவது மற்றும் இதர பாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை மாநிலங்கள்கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது அலையின் சரிவு வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது, ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் குறைந்து வரும்நிலையிலும், தமிழகம், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று உறுதிவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதுகவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்தவாறு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளைக் கடை பிடிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. எதிர்வரும்காலத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் போதிய மருத்துவஉள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்க வேண்டும்(குறிப்பாக ஊரக, பழங்குடி பகுதிகளில்) என்றும்அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சக செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலின் தலைமை இயக்குநர், எட்டு மாநிலங்களின்தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு Read More