புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-55 சமத்துவ பெரியார் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா  மாநகராட்சி மேயர்  வசந்தகுமாரி கமலகண்ணன்  மண்டல குழு தலைவர்கள்  து.காமராஜ்,  மாநகராட்சி ஆணையர் அழகு மீனா இ.ஆ.ப. மற்றும்  மாநகராட்சி அலுவலர்கள்  உள்ளனர்.