தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில்  உள்ள குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகர ஆணையர்  மாநகர  மேயர் , துணை மேயர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் .கருணாநிதி, மண்டல தலைவர் .ஜோஸப் அண்ணாதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் 26 வது  வார்டில் உள்ள குறைகளை சுட்டி க்காட்டி  காந்திநகர் பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும்  குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக லோரி தண்ணீர் தினமும் தர வேண்டியும் குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விடும்படியும் குரோம்பேட்டை பகுதியில் காய்கறி மற்றும் மீன் மார்கெட் அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தார் 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர்