செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு

தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29ஆம் நாள்சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட விவசாயிகள் ஒருமித்துமுடிவெடுத்துள்ளனர்,

தென்காசிவிருதுநகர்நெல்லைதூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழும் இலட்சக்கணக்கானமக்களுக்குக் குடிநீராகவும், 35,000 ஏக்கர் பரப்பளவுக்கு பாசன நீராகவும் விளங்கிய செண்பகவல்லி அணை, தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில், 1733ஆம் ஆண்டு சிவகிரிசேத்தூர் சமீன்களால்ஏற்படுத்தப்பட்டது. பெருவெள்ளத்தால் உடைப்பெடுத்த இச்சிறிய தடுப்பணையை 1962ஆம் ஆண்டு காமராசர்ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையினரே சீரமைத்தனர். ஆனால், பின்னர் 1969இல்மீண்டும் இவ்வணையில் உடைப்பெடுத்த நிலையில், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பை கேரளஅரசிடம் வழங்கினர். “சீரமைக்கிறோம்என முதலில் சொல்லி, காலம் கடத்திய கேரளா இப்போது அணையேஅங்கு இல்லை என அடாவடியாக வாதாடுகிறது.

கேரளாவின் இந்த அடாவடிகளை அம்பலப்படுத்தியும், தமிழ்நாட்டு உரிமையை வலியுறுத்தியும், “செண்பகவல்லிமீட்போம்என்ற ஆவணப்படம் தமிழர் கண்ணோட்டம் வலையொளி தயாரிப்பில் உருவானது. அதன் வெளியீட்டுவிழாவும், வைப்பாறு பாதுகாப்பு இயக்கத்தின் தொடக்க விழாவும், நேற்று (2023 செப்டம்பர் 15) மாலைசாத்தூரில் எழுச்சியோடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்சாத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள நாடார் மகாஜன சங்கக் கட்டிடத்தில்(மிளகாய் வத்தல் வியாபாரிகள் மண்டபம்) நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர்திரு. .. நாராயணசாமி அவர்கள் தலைமை தாங்கினார். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழுஒருங்கிணைப்பாளர் திரு. . பாண்டியன், திரு. பாக்கியராஜ் (எல்..சி., சிவகாசி) ஆகியோர் முன்னிலைவகித்தனர். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழுஇருக்கன்குடி விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்திரு. கணேசன் வரவேற்றார். நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிஇயக்கங்கள் மற்றும் உழவர் அமைப்புகளின்தலைவர்கள் பங்கேற்றனர்.

சாத்தூர் வட்டநாடார் மகாஜன சங்கப் பொறுப்பாளர் திரு. வேலுச்சாமி, ஆவணப்படத்தை வெளியிட, செல்வரேணுகா தீப்பெட்டி ஆலை உரிமையாளர் திரு. பெருமாள்சாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். இதனையடுத்துஆவணப்படம் அரங்கத்தில் திரையிடப்பட்டதுடன், “தமிழர் கண்ணோட்டம்வலையொளியில் வெளியிடப்பட்டது.


https://youtu.be/C9S3iX9KYIw?si=mf6DNsJkUAhXzxMA

என்ற இணைப்பில், ஆவணப்படத்தைஎல்லோரும் காணலாம். இதனையடுத்து, ஆவணப்படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. ஆவணப்பட இயக்குநர் தோழர் . அருணபாரதி, பின்னணக்குரல் கொடுத்து ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிக்கலவை ஆகிய பணிகளை மேற்கொண்ட சிதம்பரம் . கவின், உதவி ஒளிப்பதிவு மேற்கொண்ட தோழர்பா. மலையரசன் ஆகியோர்க்கும், தமிழர் கண்ணோட்டம் வலையொளி சார்பில் தோழர் மு. பொன்மணிகண்டனுக்கும் நினைவுப் பரிசுகளை உழவர் அமைப்பினர் வழங்கினர். பாடல் இயற்றிய பாவலர்திருமுருகன் மற்றும் இசையமைத்துப் பாடலைப் பாடிய பொறியாளர் . முத்துக்குமாரசாமி ஆகியோர் நிகழ்வில்பங்கேற்க இயலாத நிலையில், அவர்களுக்கான நினைவுப் பரிசு ஆவணப்படக் குழுவினரிடம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தொடங்கிய உரையரங்கில், சிவகிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் திரு. இரத்தினவேல், இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. செந்தாமரை, தென்மலை ஆசிரியர் திரு. பாப்புராஜ், திரு. தங்கம்(பா... தென்காசி மாவட்டம்.பி.சி. பிரிவு மாவட்டத் துணைத் தலைவர்), திரு. இராகவன் (விவசாய அணிமாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் கனகவேல் இராசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ஆவணப்படஇயக்குநர் தோழர் . அருணபாரதி ஏற்புரை வழங்கினார்.

இதனையடுத்து, தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. .. நாராயணசாமி அவர்கள்தலைமையுரையாற்றினார்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமானதோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

இந்த ஆவணப்படத்தை மக்களிடையே கொண்டு சென்று போராட்ட எழுச்சியை உருவாக்க வேண்டுமென்றுதோழர் கி.வெ. பேசினார்.

வைப்பாறு நதியைப் பாதுகாக்கும் வகையில்வைப்பாறு பாதுகாப்பு இயக்கம்தொடங்கவும், அதன்ஒருங்கிணைப்பாளராக ஐயா நாராயணசாமி அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக ஐயா சி.பி. செயச்சந்திரன் அவர்களும், ஒருங்கிணைப்புக் குழுவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பிரமுகர்களைஇணைத்தும், இதனை மக்களிடையே விரிவாக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும்வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29ஆம் நாள்சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டத்தில் ஒருமனதாகமுடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவர் பெருமக்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.