தமிழக சுற்றுலாத்துறை விருதுகள்

சென்னை, எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் 30.04.2022 அன்று“றுடீறு தமிழ்நாடு விருதுகள்” வழங்கும் விழாவிற்கான சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களுக்கான கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தொடங்கி வைத்து பார்வையிட்டு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து இந்தியா முழுவதிலும் உள்ள திறமையான காட்சித்தயாரிப்பாளர்களுக்கான மிக உயரிய றுடீறு தமிழ்நாடு விருதுக்கான போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது. உலக சுற்றுலா தினத்தில் “றுடீறு தமிழ்நாடு” என்ற தலைப்பில் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களுக்கான இணையவழி போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது கடந்த ஆறு மாதமாக நடைபெற்று முடிவடைந்தது. இவ்வாறு அனுப்ப பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்கள் அனைத்தும் பார்வையிட்டு தேர்வு செய்ய 5 பேர் கெண்ட குழு அமைக்கப்பட்டது .அக்குழுவில் திரு .ஞ.ஊ.சீராம். திரு கவுதம் வாசுதேவ் மேனன், திரு, வெற்றிமாறன், திரு.பத்ம .சந்தோஷ் சிவன், திரு.வெங்கட்ராமன் ஆகியோரால் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களை தேர்வு செய்யப்பட்டது .மேலும் இணையவழியில் அனுப்ப பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்கள் அனைத்தும் இங்கு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி 29.04.22 முதல் 01.05.22 வரை இங்கு வைக்கப்படும் .  இப்போட்டியில் 1000 மேற்பட்ட புகைப்படங்களும் 100 மேற்பட்ட வீடியோக்களும் 13 தலைப்பின் கீழ் பிரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் “றுடீறு தமிழ்நாடு – 2021 ன் Title றுinநேச ஆக தேர்வு செய்யப்பட்ட திரு. ஜெனித் அவர்களுக்கு கார் மற்றும் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் டாக்டர் சந்தர மோகன்.க்ஷ., இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அருங்காட்சியக இயக்குநர் திரு.இராமன், இ.ஆ.ப.,மற்றும் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.