அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், இன்று (18.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்  முஅப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். தொடர்ந்து, வருவாய்த்துறையின் மூலம் கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறுதானிய மதி உணவகம்தொடங்குவதற்கான சாவியையும் வழங்கினார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.52 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனங்களைவழங்கி, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லையப்பர் கோவில், சமதானபுரம், வீரளபெருஞ்செல்விஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்:

தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழ்நாட்டு மக்களுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறுதிட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையினைஉடனுக்குடன் பரிசீலனை செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளியில் கல்வி பயின்றமாணவியர்களுக்கு உயர்கல்வி தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. மகளிர்களுக்கு நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம், 1 ஆம் வகுப்புமுதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும்கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டம் வளர்சசிபாதையில் செல்கிறது.

 தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இன்று திருநெல்வேலி மாநகராட்சிசீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.85.56 கோடி மதிப்பில்சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அபிவிருத்திபணிகளும், ரூ.6.44 கோடி மதிப்பில் மாநகராட்சிக்குட்பட்ட டார்லிங் நகரில் உள்விளையாட்டுஅரங்கமும்,ரூ.14.94 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வணிகவளாகம் நிலை 1, ரூ.11.73 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம்அருகில் வணிக வளாகம் நிலை.2, ரூ.12.82 கோடி மதிப்பில் பாளையங்கோட்டைபேருந்து நிலையம் அருகில் பலஅடுக்கு வாகன நிறுத்துமிடமும், ரூ.3.69 கோடிமதிப்பில் மாநகராட்சி வர்த்தக மையம் அருகில் தொழில்முனைவோர் கூட்ட அரங்கம் மற்றும்அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைகுளம் மற்றும் 12 குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும், மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.144.69 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 அங்கன்வாடி கட்டடங்கள், 2 கிராம ஊராட்சி செயலகங்கள், பொது விநியோக கடை, சிறுதானிய மதி உணவகம் ஆகிய 8 கட்டடங்களும், வேளாண்மைதுறை சார்பில் பழவூரில் ரூ.38 இலட்சம் மதிப்பில் துணை வோளண்மை விரிவாக்கமையக்கட்டிடம், வேளாண்மை மற்றும் விற்பனை வணிகத்துறையின் மூலம் சிவந்திபட்டியில் ரூ.34 இலட்சம்மதிப்பில் உலர்களம் மற்றும் தரம் பிரித்தல் கூடம் என மொத்தம் ரூ.149.40 கோடி மதிப்பிலானதிட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு களக்காடு நகராட்சி, மற்றும்நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி, ஆகிய7 பேரூராட்சிகளுக்கு ரூ.423.13 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கிராமங்கள் மற்றும் நகரங்கள் வரை திராவிட மாடல் அரசு சீராக செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மக்களுடன் மக்களாக தமிழ்நாடுஅரசு என்றைக்கும் இணைந்திருக்கும். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பல்வேறு இடங்களில்வெள்ள சூழ்ந்த பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, அனைத்துமாண்புமிகு அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப்பணிகளை துரிதமாக நடவடிக்கைமேற்கொண்டதால் வெள்ள பாதிப்பு இயல்புநிலைக்கு திரும்பியது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் மற்றும்தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அணைவரும் கடைசி வரை செயல்பட்டு நிலைமைசரிசெய்யப்பட்டது. எப்படி பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் தமிழ்நாடு அரசு திராவிட மாடல் அரசு மக்களுடன்என்றும் உடன் இருக்கும். பல்வேறு சூழ்நிலைகளில் தமிழ்நாடு இந்தியாவிலே முதன்மையாக திகழ்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அறிவிக்கும்திட்டங்கள் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறதுஎன தெரிவித்தார்