பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

காஞ்சி கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் மேற்கு பகுதி, நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் பசுமைதாயகம் சார்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் ஐநா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக மத்திய தொடர் வண்டி துறை முன்னாள் இணை அமைச்சர் .கே.மூர்த்தி கலந்து கொண்டுஅங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, அன்னதானம், மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கு..அரங்கநாதன், காஞ்சி கிழக்கு மாவட்ட பாமகசெயலாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் கெருகை மனோகரன், ஆலந்தூர் மேற்கு பகுதி செயலாளர்சீனிவாச முதலியார், பகுதி தலைவர் உதயகுமார், ஆலந்தூர் தொகுதி செயலாளர் செல்வம், நிர்வாகிகள்முருகேசன், கங்காதுரை, பாண்டியராஜ், ரேணுகண்ணன், லயன்.அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான பாமகமற்றும் பசுமைத்தாக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.