சாலையின் நடுவே இருந்த 60-ஆண்டுகால ஆலமரம் பசுமைத் தாயகத்தினர் வேரோடு பிடுங்கி பூங்காவில் நட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில் தனியார் வீட்டுமனை பிரிவு இடத்தில்சாலையின் நடுவே சுமார் 60ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தை பாதுகாத்து மாற்று இடத்தில் நட வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பை அந்த தனியார்வீட்டுமனை பிரிவினர் நாடினர். அதனை தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் செளமியாஅன்புமணி அவர்களின் வழிகாட்டுதலின் படி பசுமைத்தாயகம்

மாநில துணை செயலாளர் .நா.கண்ணன் தலைமையில் பசுமைத்தாயக நிர்வாகிகள் இணைந்துதோட்டக்கலைதுறையின் ஆலோசனை படி சாலையின் நடுவே இருந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டிஎடுத்து பின்னர் ஆலமரத்தை ஜேசிபி இயந்திர உதவியுடன் வேருடன் தோண்டி எடுத்து பாதுகாப்பாக இரண்டுராட்சத கிரேன் மூலம் ஆலமரத்தை தூக்கி எடுத்து லாவகமாக எடுத்து சென்று, சுமார் 500 மீட்டர் தொலைவில்உள்ள நீர்நிலை பகுதியை ஒட்டி இருந்த பூங்கா அமையும் இடத்தில் முதல் மரமாக தோண்டி எடுக்கப்பட்டஅந்த ஆலமரம் நடப்பட்டது.

மரம் நடுவதற்கு முன்பு மரத்தின் அளவுக்கு ஏற்ற வகையில் பள்ளம் தோண்டி அதில் அடி உரமாககால்நடைகளின் சானம் போடப்பட்டது. ஆலமரத்தின் வேர் பகுதி முழுவதும் மாட்டு சானம் கரைசல் ஊற்றப்பட்டு அதன் பிறகு ஆலமரம் நடப்பட்டது. சாலையின் நடுவே இருந்த ஆலமரத்தை பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் நட்டு சுற்றுசூழலைபாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட பசுமைத் தாயகம் அமைப்பினரை அப் பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினார். இதில் பசுமைத் தாயக நிர்வாகிகள் செல்லப்பா, அசோக், ராகுல் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள்,பன்னீர்செல்வம், ராஜேஷ்  கலந்து கொண்டனர்.