ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம்,
ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன்,
கணபதி, ஜோசப் சாமுவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.