கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, திமுக மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ், ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.