கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

இராஜபாளையம் 25, மே.:- *இராஜபாளையம் தொகுதியில்* தளவாய்புரம் ஊராட்சி பி.கே.எஸ். திருமண மண்டபத்திலும் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை
சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., இராஜபாளையம் தொகுதியில் தினந்தோறும் 2500 தடுப்பூசிகள் வந்துகொண்டிருக்கிறது இதனை மேலும் அதிகப்படுத்தி அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் சிவகாசி மருத்துவத்துறை உதவி இயக்குனர் கலு சிவலிங்கமிடம் கேட்டு உள்ளேன். மேலும் கொரோனா வைரஸை எதிர்க்க நமக்கு உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே ஆகவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவத்துறை உதவி இயக்குனர் கலு சிவலிங்கம், ஊரக தலைமை மருத்துவர் கருணாகர பிரபு, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.