நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து மனுவை அளித்தார் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்.