சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, சிப்காட் வளாகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் TCC கம்பெனி திடக்கழிவுகளை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் உடனிருந்தனர்.