பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார்

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லையில் பள்ளியில்லுள்ள வேறு சிலருக்கும் தொடர்புள்ளதாக
காவல்த்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையின் போது தெரிவித்தார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தினர் கலக்கமடைந்துள்ளார்கள். கைதான  ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளியில் படித்த மாணவி ஒருவரின் புகாரின் பேரில்  போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.