2 Childrens gave their savings for Corona fund toAddl.COP (N) Tr.Dhinakaran

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு.வெங்கடேசலு என்பவரின் மகன்கள் புருசோத்தமன் (வயது 13) மற்றும் ஜஸ்வந்த் பாலாஜி (வயது 12) என்பவர்கள் தினமும் அவர்கள் பெற்றோர் கைசெலவிற்காக கொடுக்கும் பணத்தை செலவழிக்காமல் சேமித்து வைத்த உண்டியல் பணமான ரூ.741 மற்றும் ரூ.816 மொத்தம் ரூ.1,557. தற்போது கொரோனோ நோய் தொற்று பரவி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஒரு வேளை கூட உண்ண உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அவர்களது தந்தையுடன் நேரில் வந்து காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன் ஐ.பி.எஸ் அவர்களிடம் உண்டியல் பணத்தை கொடுத்தனர்.