இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம்

நாட்டின் லட்சியமிக்க இலக்குகளை எட்டுவதில்துறைமுகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து விளக்கியகுடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்க  அழைப்புவிடுத்தார். விசாகப்பட்டினத்தில் குடியரசு துணைத் தலைவர் உடனானஉரையாடலின் போது, விசாகப்பட்டினம் துறைமுகபொறுப்பு கழகத்தின் தலைவர் திரு கே ராம மோகன ராவ்மற்றும் இதர மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சி ஒன்றைவழங்கினர். விரிவாக்கத் திட்டங்கள் உள்பட துறைமுகத்தின்பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குடியரசு துணைத்தலைவரிடம் அவர்கள் விளக்கினர். அப்போது பேசிய திரு நாயுடு, சுமார் 7,517 கிலோ மீட்டர் நீளகடற்கரை மற்றும் 200-க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் சிறுதுறைமுகங்களுடன், உலகின் முக்கிய கப்பல்வழித்தடங்களில் இந்தியா இடம் பெற்றிருப்பதாககூறியதோடு, இந்திய பொருளாதாரத்தில் இந்ததுறைமுகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். பண்டைய இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாகதிகழ்ந்ததாக நினைவுக்கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், சோழ மற்றும் கலிங்க மன்னர்கள் பெருங்கடல்களைஆண்டார்கள் என்றும் அத்தகைய நிலையை நாம் மறுபடியும்எட்ட வேண்டும் என்றும் கூறினார். நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்துபேசிய அவர், லட்சியம் மிகுந்த சாகர்மாலா திட்டத்தின் ஒருபகுதியாக 504-க்கும் அதிகமான திட்டங்கள் துறைமுகம்சார்ந்த மேம்பாட்டு வாய்ப்புகளுக்காக அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும்,3.57 லட்சம் கோடி ரூபாய்க்கும்அதிகமான உள்கட்டமைப்பு முதலீட்டை இந்த திட்டங்கள்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 குறித்து பேசிய குடியரசுதுணைத் தலைவர், செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில்சர்வதேச சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறுகேட்டுக்கொண்டார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 எட்டமுடியாத ஒன்று அல்ல என்று தெரிவித்த அவர், இந்தியாவிடம் அறிவின் சக்தி இருப்பதாகவும் ஒன்றுபட்டநோக்கத்துடன் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்றும்கூறினார்.

இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம் Read More

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா, முழுமையான சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க்கில் பிரசித்திபெற்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்து …

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு Read More

ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

ஏழாவது சர்வதேச யோகா தின விழாவில் உரையாற்றியபிரதமர் திரு நரேந்திர மோடி, ‘சர்வதேச சுகாதார அமைப்புஎம்–யோகா’ செயலியை அறிமுகப்படுத்தினார். பொது யோகாசெயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகாபயிற்சிகள் மற்றும் செய்முறைகள் குறித்த காணொலிகளைபல மொழிகளில் இந்த செயலி வழங்கும். நவீன தொழில்நுடபத்துடன் பண்டைய அறிவியல. இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று வர்ணித்தபிரதமர், யோகா குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும்பரப்ப எம்–யோகா செயலி உதவும் என்றும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்’ முயற்சிகளுக்கு பங்காற்றும் என்றும்தெரிவித்தார். “யோக அறிவியலை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கிடைக்கசெய்யவே ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகாதினத்தை இந்தியா முன்மொழிந்தது. இன்றைக்கு, ஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புடன்இணைந்து மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை இந்தியாஎடுத்துள்ளது. எம்–யோகா செயலியின் சக்தியை உலகம் தற்போதுஉணரப்போகிறது.  பொது யோகா செயல்முறையின்அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சி காணொலிகளைஉலகின் பல மொழிகளில் இந்த செயலி வழங்கும். நவீனதொழில்நுட்பத்துடன் பண்டைய அறிவியலைஇணைப்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும். யோகாவை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்’ முயற்சிகளின் வெற்றிக்கும் எம்–யோகாசெயலி முக்கிய பங்காற்றும்,” என்று பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக தற்போதைய பெருந்தொற்றின் போது யோகாமற்றும் நல்வாழ்வை உலகெங்கும் உள்ள மக்களுக்குகொண்டு செல்ல இந்த கைப்பேசி செயலி மிகவும்உதவிகரமாக இருக்கும். கொவிட்-19-ல் இருந்துகுணமடைந்த நோயாளிகளின் மறுவாழ்விலும் இது முக்கியபங்காற்றும் என்று பிரதமர் கூறினார். நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா

ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார். Read More

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை பற்றிய செய்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி தொகை 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 20,700 கோடியாக இருந்ததாகவும்,  இதற்கு முந்தைய 2019-ஆம் ஆண்டு இறுதியில் இந்தத் தொகை ரூ. 6,625 கோடியாக இருந்ததாகவும் இதன்படி 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்த நிதித் தொகை, தற்போது தலைகீழாக மாறி இருப்பதாகவும் 18.6.2021 அன்று வெளியான ஒரு சில ஊடக …

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை பற்றிய செய்திகளுக்கு நிதி அமைச்சகம் விளக்கம் Read More

மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 3 நாட்டில் மட்டும் ரூ.66,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது நிறுவனங்கள் மீதான பங்குகளில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீர் வீழ்ச்சி …

மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி Read More

நேர்மறை சிந்தனை: பெருந்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கும் நிவாரணி

“தற்போதைய பெருந்தொற்று  சூழலும், பொதுமுடக்கமும் இன்றியமையாதது என்பதால்,  இந்தக் கொடிய தொற்று நமக்கு அளித்துள்ள நேர்மறையான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, நமது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நாள் முழுவதும் பல்வேறு விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.” கொவிட் பெருந்தொற்றின்போது மன அழுத்தத்தை எவ்வாறு …

நேர்மறை சிந்தனை: பெருந்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கும் நிவாரணி Read More

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை

உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  கொங்கன் மற்றும் கோவாவின் சில இடங்களிலும், மேற்கு உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை பாயும் …

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை Read More

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு …

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல்

நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ்டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்,  வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின்நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும்ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்புவலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல்நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.  நாள்பட்ட இடுப்பு வலியில்,  யோகாவின் தாக்கத்தைமதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறைஉதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.  3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயதுநோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகாபயிற்சிக்குப்பின்,  அவர்களிடம் உணர்வு அளவீட்டுபரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில்குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்புவலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்பு த் தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம்  பெருமூளையின்செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மைகுறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.  நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள்யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமானசிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின்நெகிழ்வு அதிகரித்துள்ளது. வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல் Read More

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லைஎன  நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் உள்ள பத்திரிகை தகவல்அலுவகத்தின் தேசிய ஊடக மையத்தில் இந்த வாரதொடக்கத்தில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால்கூறியதாவது: ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைகண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாககண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)).   இதுகவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC).  இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக்கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இப்போதைக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மைபற்றி எங்களுக்கு தெரியாது. இந்த மாறுபட்ட கொரோனா நம் நாட்டில் இருக்கிறதாஎன்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதாரநடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ளவேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல்பூர்வமாக கண்காணிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வகைகொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது.  இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கொவிட்கூட்டமைப்பு(இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும்.  இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின்எதிர்காலப் பணி.  இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாககண்காணித்து ஆய்வு செய்யும். இந்த மாறுபட்ட கொரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைநமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும்அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும்அடங்கியுள்ளன. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகைமாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்டகொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும்வகைப்படுத்தப்படவில்லை Read More