ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர். பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது.  இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது.    இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.   2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு Read More

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள்

பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்  மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாகப் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் பதவி ஏற்பதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களின் உன்னதப் பணியை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், …

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள் Read More

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.  …

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது Read More

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. 1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் …

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து Read More

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் …

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! Read More

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவி ஏற்ற தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா.

கேரளாவில் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தமிழில் பதவிபிரமாண உறுதி மொழி கூறி, பதவி ஏற்றுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தீன் மாநில நிர்வாகியான வழக்கறிஞர் ராஜா, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் இருந்து அம் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு …

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவி ஏற்ற தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா. Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு Read More

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில்  போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநில காவல்துறையின்  சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். கமாண்டோ படையினர் வனப்பகுதிக்குள் வருவதை அறிந்த 50 …

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை Read More

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி, வன் தன் திட்டம் மூலம்   ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் சேகரிக்கும் வன உற்பத்தி பொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின்  இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை …

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை Read More