செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் .அருண்ராஜ், ...,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 262 மனுக்கள்பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்தஅலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின்மூலம் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (ALIMCO) நிறுவனத்தின் மூலம் 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .அருண்ராஜ், ..., வழங்கினார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர்  சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  சாகிதா பர்வின், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், ..., சார் ஆட்சியர் (பயிற்சி) பிரியா, ..., மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திராமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல அலுவலர்வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.