தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின்நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு,  (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர்மேட்ரிட் சென்றடைந்தார்.மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சரை, ஸ்பெயின் நாட்டிற்கானஇந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர. கொத்து வழங்கி வரவேற்று, சந்தித்து பேசியபோது, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.  இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர்டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார்.

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில்நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர்  நடத்த உள்ளார்கள். இம்மாநாட்டில்தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில்ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.