செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்றபோட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில்நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்.அருண்ராஜ், ..., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்துவாழ்த்துக்களை பெற்றனர். மாணவன் ஆஸ்பன் ஜெயராஜ்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பசும்பொன் நகர், புனித தோமையர் மலை ஒன்றியம் அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில்அழைப்பித்து அம்மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டிவாழ்த்தினார். மேலும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்ற பி.தர்ஷினி, ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, பழையனூர், மதுராந்தகம் ஒன்றியம் அவர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்பாராட்டினார்கள்.

மாணவன் ஜெயகாந்த், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொளத்தூர் புனித தோமையர் மலைஒன்றியம் அவர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.

மேலும், மாணவர்களை வழிநடத்தி அழைத்துச் சென்ற ஊர்மளா தேவி, பட்டதாரி ஆசிரியர், அரசுமேல்நிலைப்பள்ளி, எல்.எண்டத்தூர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர்பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்டகல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.உதயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள்உள்ளனர்.