சிலம்பம் பயிற்சி பட்டயம் வழங்கும் விழா

கடந்த 23.07.2022.சனிக்கிழமை படூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமது லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் சார்பில் 6-ம் ஆண்டு திறணறிவு தேர்வு மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் 195 பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் மட்டும் 80-பேர் கலந்து கொண்டது சிறப்பு. 5 மற்றும் 6 ம் ஆண்டு பட்டயத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆசான்கள் , பயிற்சியாளர்கள் கொண்ட அணியினர் பல்வேறு சிலம்பம் பற்றிய கேள்விகள் கேட்டு பதில் பெற்றது இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும்  சட்ட ஆலோசகருமான க. தேசிங் தலைமையில் நடைபெற்றது*********

இவ்விழாவில் படூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி KAS.தாரா சுதாகர் ,கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. இராணி எல்லப்பன் , படூர் சுதாகர் , கேளம்பாக்கம் திமுக பிரமுகர் எல்லப்பன், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு.அசோக்ராஜன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு,M.ஆனந்தன் மற்றும் மஞ்சூரியா குங்ஃபூ மாஸ்டர் ஸ்ரீதர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசளித்து பாராட்டினர்.இறுதியில் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் நிறுவனர் க.தனபால் அவர்கள் நன்றியுரையாற்றினார்.  இயற்கை கூட இவ்விழாவினை மழையாக பொழிந்தது வாழ்த்தியது.