யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவருக்கு மடிக்கணனி அன்பளிப்பச் செய்த கனடா ரொறன்ரோ மனித நேய அமைப்பினர்

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவரான செல்வன் சிவனேசன் கோபிதனுக்கு அவரது கற்றல் தேவைக்கு பயன்படும் வகையில் மடிக்கணனி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு கிடைத்தது .

அந்த வேண்டுகோளுக்கு இணங்க பல்கலைக் கழகத்திற்கு நேரடியாகச் சென்ற அமைப்பின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் அமைப்பின் அங்கத்தவர் சங்கர் சிவநாதன் ஆகியோர் மடிக்கணனி ஒன்றை அன்பளிப்பச் செய்தனர்.

இந்த அன்பளிப்பைச் செய்வதற்கு தேவையான நிதியை ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு வழங்கியவர்கள் கனடாவின் வீடு விற்பனை முகவர் பாஸ்கரன் சின்னத்துரை மற்றும் சங்கர் அன்கோ உரிமையாளர் ஶ்ரீதரன் ஆகியோர் ஆவார்கள்.