கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 5 லட்சம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலினை 28-06-2021 அன்று சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர், முதன்மைத் துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரகுமான், துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கினார்கள்.