நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ்

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான்கருத வேண்டும்மூலம்  முதலமைச்சர் திருமு.ஸ்டாலின் அவர்கள்தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில்பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளதுஇதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதுதமிழகஆளுநரின் உரையைவளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக்கடமைப்பட்டிருக்கிறேன்கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட்தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுபெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராகஇருந்த போதேதிருமு.ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லாபணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரானபணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள்முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றைஎதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன்பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக்கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல்இருக்க முடியாதுஅதேபோலதடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்ததயக்கம் நீக்கப்பட்டுதடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்புநடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவெளிப்படுத்துகிறதுஅதேசமயம்தமிழகத்திற்குத் தடுப்பூசிவழங்குவதில் மத்திய பா..அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறபோக்கையும் காண முடிந்ததுஇதையும் எதிர்கொண்டு தடுப்பூசிபோடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழகஅரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவைகொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திருமு.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும்இந்தப் பணியில்முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பேமுதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவெளிப்படுத்துகிறதுதமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையைஇரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்குவழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழகமுதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல்பரிசு பெற்ற எஸ்தர் ப்லோஇந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்றபொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவைஅமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும்இவர்களதுஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுஅதேபோலகடந்த .தி.மு.ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளதுஇதை எதிர்கொள்ள வேண்டியகடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறதுஅதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியபொறுப்பும் இருக்கிறதுஇதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதிவருவாயைப் பெருக்கிபல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கைதெளிவாகச் சுட்டிக் காட்டுகிறதுமத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம்ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லைமத்தியில்பா..ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில்தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதுஅன்றைய .தி.மு.ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால்தமிழக மாணவர்கள்குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறமாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதைஅனைவரும் அறிவார்கள்இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும்அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி .கேராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குழுவின்பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ​(கே.எஸ்அழகிரி)