ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,..., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்துமேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர்இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடியமனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிடவேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள்எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும்மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,..., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, மாவட்ட வழங்கல்அலுவலர் நாராயணன்,  சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.