ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா பாடிய “மாமா குட்டிமா” பாடல் வெளியானது

பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய  பாடல் தொகுப்பு மாமா குட்டிமாவெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான டாக்டர். மாலாகுமார் தனது மாலாகுமார்படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.  இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக குரலில் பாடியுள்ளார்.********

விஜய் ஆண்டனி நடித்தநான்திரைப்படத்தில் இடம்பெற்றதப்பெல்லாம் தப்பே இல்லைபாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஅண்ணாத்த‘, அஜித் குமார் நடித்தவிஸ்வாசம்உள்ளிட்டபடங்களுக்கு எழுதிய புரோமோபாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. முத்து முத்து கருவாயா‘, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே‘, ‘கண்ணத்தொறந்ததும் சாமிஆகியவை அஸ்மின் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்தவெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆனஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யாய் சொல்லிஏமாத்தினது போதும்பாடலும் இவர் எழுதியது தான்.  முத்து முத்து கருவாயாமூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவாஅஸ்மின்கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. ராப் பிரசாத் இயக்கியுள்ள இந்த அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டுவைத்தார்.

இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறும்போது. காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவதுமகிழ்வை தருகிறது.மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின் தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கெசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம்ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார் இது நான் பெற்ற பாக்கியம். மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம்இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்குஇசையமைத்துள்ளார்  என்று கூறினார்.