குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

T16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படைகாவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் 03.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார்03..00 மணியளவில் (04.7.2021) நசரத்பேட்டை சிக்னல் அருகில்சந்தேகத்திற்கிடமாக 2 பல்சர் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். உடனே, காவலர்கள் இருவரும், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தமற்றொரு நபரை மடக்கிப்பிடித்து, அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஸ்குரூ டிரைவர் மற்றும் கட்டிங் பிளேயரைஎடுத்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, காவலர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவ்வழியேமற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த T-16 நசரத்பேட்டைகாவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரும்காவலர்களுடன் சேர்ந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய்,வ/24, த/பெ.லோகநாதன், ரெட்டிதோப்பு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் என்பதும், விஜய்தப்பிச் சென்ற அவரது 2 நண்பர்களுடன் ஒரே பல்சர் இருசக்கரவாகனத்தில் சென்னைக்கு வந்ததும், நள்ளிரவு பூந்தமல்லியில்நோட்டமிட்டு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு பல்சர் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு, விஜய் அவரது இருசக்கரவாகனத்திலும், நண்பர்கள் இருவரம் திருடிய இருசக்கரவாகனத்திலும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்நசரத்பேட்டையில் விஜய் பிடிபட்டதும் தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன், இரவு ரோந்துபணியிலிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஜன்அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு 2 நபர்கள்செல்வதாக தகவல் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர்திரு.கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுகண்காணித்தபோது, 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobainநிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தைபோட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மற்றொரு பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இருசக்கர வாகனம் பூந்தமல்லி பகுதியில்திருடப்பட்டதால், பிடிபட்ட குற்றவாளி விஜய், பறிமுதல்செய்யப்பட்ட 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், ஸ்குரூ டிரைவர்மற்றும் கட்டிங் பிளேயருடன் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.  அதன்பேரில் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின்னர் எதிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ​ 2. அமைந்தகரை பகுதியில் வீட்டிலுள்ள சிலிண்டரில் பற்றியதீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக்காவலர்  ​சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி, எண்.28 என்ற முகவரியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மகள்கடந்த 03.7.2021 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், வீட்டின் வெளியே வாசலில் மண்ணெண்ணெய் அடுப்பைபற்ற வைத்தபோது, வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில்வாயு கசிந்து இருந்ததால், அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள்பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புதலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று, வீட்டில் பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரும் தீபிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே தலைமைக் காவலர்சரவணன், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி சிலிண்டரில்பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியேகொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம்நிகழாமல் தடுக்கப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கரவாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படைகாவலர் அஸ்வின்குமார் மற்றும் K-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆகியோரை சென்னைபெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  நேரில் அழைத்துபாராட்டி வெகுமதி வழங்கினார்.

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார்

16 நசரத்பேட்டை காவல் நிலையதலைமைக்காவலர்    T.சீனிவாசன் (த.கா.35312) என்பவர் (1.7.2021) காலை 10.15 மணியளவில்  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபாப்பான் சத்திரம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, சிவன்கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போது, அங்குஇருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில்இருவரையும் கைது செய்து  T-16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.​T-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் 1.தேவேந்திர நாத்கொகோய், , வ/31,  த/பெ.அகன்சந்திரகொகோய், சன்டியா தாலுக்கா, டின்சுகியா மாவட்டம்அஸ்ஸாம் 2.அன்டார்யாமி மஹாலிக், வ/23, த/பெ.பிரபாகர்மஹாலிக், கல்யாண்பூர், பலேஸ்வர், ஓடிசா மாநிலம்  ஆகியஇருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,24,320/-, 3 செல்போன்கள்மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படிஇருவரும்  நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சாவிற்பனை செய்த  2 வெளிமாநில குற்றவாளிகளைகைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலையதலைமைக்காவலர் T.சீனிவாசனை,  சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 02.7.2021 நேரில் அழைத்து பாராட்டிவெகுமதி வழங்கினார். 

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார் ஆணையர்

பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் GNT சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டனா, சென்னையிலுள்ள பல பகுதிகளை இணைக்கும் சாலை சந்திப்பு என்பதால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் இடமாக உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார் ஆணையர் Read More

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு.

சென்னை மாநகர காவல்துறையின் பத்திரிக்கை தொடர்பு உதவி ஆணையராக பதவி வகித்து வந்த பாஸ்கர், சென்னை திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஸ்கர் சென்னை திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு. Read More

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற …

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ் Read More

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல்.

எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் அரங்கேறிய கொள்ளை …

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல்!: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன் திடுக் தகவல். Read More

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்

புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர்கள் பெயர் விவரம், அவர்கள் பதவி ஏற்கும் இடம் விவரம் வருமாறு:- சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் 1. சுதர்சன்- நீலாங்கரை, 2.பாலமுருகன்-வட பழனி, 3. அமீர் அகமது-பரங்கிமலை, 4. அர்னால்டு ஈஸ்டர்-மீனம்பாக்கம், 5. சீனிவாசன்-தாம்பரம், 6.முருகேசன்-சேலையூர், 7. …

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம் Read More

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சொகுசு பங்களா, கல்வி நிலையங்கள், கோயில், மசூதி என அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆசிரமம் நடத்திவருபவர் 72 வயதாகும் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதே சிவசங்கர் பாபாவின் ஸ்டைல். …

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ் Read More

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள  நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு  உதவ  ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் …

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர் Read More

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது

பாதிக்கப்பட்ட சுசில்அரி இன்டர்நெஷ்னல் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் மீது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவருடைய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மூன்று …

பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா கைது Read More