அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது.

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில்வசித்து வந்த 14 வயது சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்துவந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று சிறுமி அவரதுபெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடைக்குசெல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சிறுமியின் பெரியம்மா K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காணாமல்போன பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. K-3 அமைந்தகரை காவல் நிலையஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரவிசாரணை செய்ததில், காணாமல் போன சிறுமி ஒருஆண் நபருடன் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணைமற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியைகடந்த 25.3.2021 அன்று கண்டுபிடித்து மீட்டு விசாரணைசெய்தனர். விசாரணையில், சிறுமியை அவரது மாமாசெல்வகுமார், வ/26, என்பவர் காதலிப்பதாகவும், திருமணம்செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்றுதிருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகதெரிவித்தார். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலஅமைப்பு வாரியம் மூலம் குழந்தைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். மேலும் மேற்படி வழக்கானது, W-7 அண்ணாநகர்அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றம்செய்யப்பட்டு, காணாமல் போன பிரிவில் பதியப்பட்டவழக்கு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம்செய்யப்பட்டது. W-7 அண்ணாநகர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரதேடுதலில் ஈடுபட்டு, சிறுமியை அழைத்துச் சென்றுதிருமணம் செய்து தலைமறைவான செல்வகுமார், வ/26, த/பெ.கணேசன், எண்.19/13, அன்னை சத்யா நகர் முதல்தெரு, வில்லிவாக்கம், என்பவரை நேற்று (14.6.2021) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி செல்வகுமார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டார்.

அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது. Read More

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் …

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார் Read More

பெற்ற பிள்ளைகளே தந்தையிடம் 20 சவரன் நகை ரூ 16 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி அருகே, 16 லட்சம் ரூபாய், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், (வயது60) விவசாயி. இவருக்கு லோகேஷ்குமார், (32 )என்ற  மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார், தந்தையுடன் கோபித்து …

பெற்ற பிள்ளைகளே தந்தையிடம் 20 சவரன் நகை ரூ 16 லட்சம் மோசடி Read More

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி

பெரம்பூர் அரசு அதிகாரியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 1 லட்சம் ரூபாய் ஆட்டை போட்ட மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 55. இவர், தலைமை செயலகத்தில் இணை செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் …

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி Read More

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசுமேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்உள்ளது. நாளை (14.6.2021) முதல் தமிழகத்தில் சென்னை உட்பட27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கஉத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையாளர்மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர்திரு.எல்.சுப்ரமணியன், இ.ஆ.ப., தலைமையில், காவல் அதிகாரிகள்மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (13.4.2021) மாலை காவல் ஆணையரகத்தில் ஒருங்கிணைப்பு கலந்தாய்புமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டமைப்புகளுடன் கடைகள் திறந்துநடத்திட ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினர்மூலம் தகுந்த தடுப்புகள் கொண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யவும், பொதுமக்களை வரிசைபடுத்தவும், சமூக இடைவெளிகடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகடைபிடிக்காமல் வரும் நபர்களுக்கு, மதுபான வகைகள் வழங்கவேண்டாம் எனவும், ஒலி பெருக்கி வசதி, சில மீட்டர் தூரத்தில்பந்தல் அமைத்து மதுபானங்கள் வாங்க வருபவர்களைவரிசைபடுத்துதல் குறித்தும், நடவடிக்கை எடுக்கஆலோசிக்கப்பட்டது.  மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்மற்றும் காவல் அதிகாரிகளுடன் இன்று (13.6.2021) மாலைசென்னை, 1.பெரியமேடு, ஈ.வெ.ரா.சாலை (எவரெஸ்டு ஓட்டல்எதிரில்), 2.எழும்பூர், வான்னல்ஸ் சாலை, (ஆல்பட் திரையரங்கம்அருகில்), 3. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுகட்டமைப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அங்குமேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி விற்பனை செய்ய வேண்டும் எனஅறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பொது மேலாளர்திரு.சுகுமாறன், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், இ.கா.ப., கிழக்கு மண்டல இணைஆணையாளர் எஸ்.ரஜேந்திரன், இ.கா.ப., துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் Read More

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி

வடபழநி-மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் எனக் கூறி, வீட்டு உபயோக பொருள் விற்பனையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில், கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன், 35. இவரை …

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி Read More

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது —————————

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை அடையாறு பகுதியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், இந்நாள் …

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது ————————— Read More

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது

கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்கள் போலீசார் கைது செய்தார்கள். கடந்த 6.6‌ 2021 ஆம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய சரகம் கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு …

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க …

Read More

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.  2.​ இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500  அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.​சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. 4.​தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும்  அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர். 5.​மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பத்வு Read More