ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு!

வேலூர், ஜூலை. 16: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வகா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.