கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி, ஜூலை. 16: திருவெறும்பூர் தொகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நடைபெற்ற கொரோனாத் தடுப்பூசி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.