மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் தொடக்கம்

தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் கடற்படை அகாடெமி நடத்தும் தேர்வுகளுக்கு செல்பவர் களுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்டி எண் 06103 திருநெல்வேலி மதுரை முன்பதிவில்லா ரயில் திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 5.15 மணிக்கு புறப்பட்டு கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் வழியாக காலை 8 மணிக்கு சென்றடையும். அதே போல் வண்டி எண் 06104 மதுரை – திருநெல்வேலி முன்பதி வில்லா ரயில் மதுரையில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர் வழியாக இரவு 9 மணிக்கு திருநெல் வேலியை சென்றடையும்  முன்பதிவில்லா பயண சீட்டு வழங்க இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் UTS (முன்பதிவில்லா பயண சீட்டு) டிக்கெட் COUNTER திறந்து இருக்கும் தெர்மல் ஸ்க்ரீனிங் மூலம் அணைத்து பயணியருக்கும் உடல் வெப்ப நிலை அளவை சரி பார்த்த பின்னரே ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் ரயில் நிலையங்களிலும் மற்றும் ரயில் களில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அணைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றி பயணியர் நடந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.