பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட்வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலம்ஜெய்பூரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் இந்திய புவியியல் ஆய்வுநிறுவனத்தைச் சேர்ந்த  கிருஷ்ணகுமார், பிரக்யாபாண்டே, த்ரிபர்னா கோஷ், டெபாசிட் பட்டாச்சாரியாஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனைக்கண்டறிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் பகுதியிலிருந்துஜுராசிக் பாறாங்கற்களில் (ஏறத்தாழ 160-168 மில்லியன்ஆண்டுகள் பழமை வாய்ந்த) முதன்முறையாகஹைபோடோன்ட் வகை சுறா மீன்கண்டறியப்பட்டிருப்பதாக மூத்த புவியியல் ஆய்வுஅதிகாரி திரு கிருஷ்ண குமார் கூறினார். தற்போதுஅழிந்திருக்கும் இந்த வகை சுறா மீன்கள், ஜுராசிக்மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல் மற்றும்நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும். எனினும் ஜுராசிக் காலத்தின் மத்தியில் இந்த வகை சுறாமீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இவை முழுவதும்அழிந்தன.  ஜெய்சல்மரில்  புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதியஉயிரினத்திற்கு சொந்தமானது என்று ஆராய்ச்சிகுழுவினர் தெரிவிக்கின்றனர்.‌ இந்த உயிரினம் இந்தியத்துணை கண்டத்தில் முதன்முறையாககண்டறியப்பட்டிருப்பதுடன், ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்தைத் தொடர்ந்து இது மூன்றாவதுகண்டுபிடிப்பாகும். ஜுராசிக் காலத்தியமுதுகெலும்புடைய புதைபடிவங்கள் குறித்தஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமைல்கல்லாக அமைந்துள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு Read More

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத …

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல் Read More

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கு உலை வைத்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் …

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவி சௌந்தர்யா தற்கொலை- மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் வைகோ வேண்டுகோள் Read More

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். கொச்சின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ விமானத்தில் இன்று அதிகாலை 2.20 …

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல் Read More

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று …

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; நீட் என்னும் அநீதியை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் – முதல்வர் ஸ்டாலின் Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த் Read More

கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு’ எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   நீலகிரி மாவட்டம், …

கோடநாடு வழக்கு: ‘குற்றவாளியை நெருங்கிய காவல்துறை’ -எடப்பாடி பழனிசாமிதான்முழு பொறுப்பு – பெங்களூரு புகழேந்தி Read More

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த …

பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் – அதிர்ச்சி தரும் ஆய்வு Read More

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் …

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் Read More

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவிகனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும்வேதனையையும் அளிக்கிறது.  மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின்பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைசிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும்முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்துமற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும்ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளசட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச்சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றஉறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்வழங்குகிறேன். நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்லஎன்பதை, ஆள்மாறாட்டம் – வினாத்தாள் விற்பனை – பயிற்சிநிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள்தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில்சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வுநீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசுதொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச்செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களேஅளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக்கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து  உயிர்விடும் அவலத்தைத்தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டைவிரட்டுவோம். மாணவி  கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்றஇன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலைஉருவாக்கிடுவோம்.

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல் Read More