திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.  தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.       இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில்இருந்து வந்திருந்த  பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகைஉயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் அதனை சென்னை விமான நிலையசுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தகஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதனைப் பிரித்து பார்க்கையில், தெர்மாகோல் பெட்டிஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள்  பருத்தி மற்றும்வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.  அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொருகுப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள்இருப்பது தெரியவந்தது. சிலந்திகளை சோதனையிட்டவிலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள், அவை இறக்குமதிசட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தகஉரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு  பரிந்துரைத்தனர். சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல்போலந்திற்கு திருப்பி  அனுப்பப்படுவதற்காக தபால்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டுதுறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கியபொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சாஅடங்கிய 3 பார்சல்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள், மெதாம்ஃபெடமைன், அம்ஃபெடமைன், சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள்போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல் Read More

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ்

“கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்.  வளர்ச்சிக்கு அறிகுறி அது.  நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல.  இது நாடு, காடு அல்ல.  காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது; பாசிச முறை அது’’ என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் …

விடியா’ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறார் இ.பி.எஸ் Read More

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ.

ஒன்றிய அரசின் அமைச்சரவை பிரதமரின் தலைமையில் கூடி தொலைதொடர்புத்துறையில் நூறு சதவீதம் ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் நிதியமைச்சர் பொதுச் சொத்துக்களை விற்று 6.5 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்டுவது என்ற விபரீதத் திட்டத்தை அறிவித்துள்ளார். நாடு விடுதலை …

பொது சொத்துக்களை விற்பது நாட்டின் சுயசார்பை தகர்க்கும் செயலாகும் – இ.கம்யூ. Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தனித்து போட்டி Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என …

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Read More

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 …

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்.. Read More

திமுக குடும்பத் திருமண விழா

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை தானிப்பாடியில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… உடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற …

திமுக குடும்பத் திருமண விழா Read More

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள்

1987 செப்டம்பர் 17 ல் வன்னிய மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய 21 வன்னிய தியாகிகளை அன்றைய  எம்ஜிஆர் அரசு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.. நம் உரிமைக்காக உயிர் நீத்த 21 தியாகிகளின்  போராட்டத்தை அங்கீகரித்த இன காவலர் முன்னாள் முதல்வர் மு. …

வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள் Read More

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்

நேற்று (15-09-2021) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதுபோது, முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் …

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டுமென முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் Read More