சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து …

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்: மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் …

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன சேலத்தில் நலத்திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .  1000  நபர்களுக்கு அன்னதானம் 6 நபர்களுக்கு தையல் மிஷின் 11 நபர்களுக்கு மருந்து தெளிப்பான், 25 நபர்களுக்கு பாண்டு, 4 …

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன சேலத்தில் நலத்திட்ட உதவிகள் Read More

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார்

பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்குமுக்கியத்துவம் தர வேண்டும்.  பெண்கள் படிக்கவே கூடாதுஎன்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில்மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும்காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்டபுதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்குகடுமையாக உழைப்பதோடு  உரிமைக்கு அஞ்சாமல் குரல்எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிடபெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.  ஒப்பீட்டு அளவில்புதுச்சேரியில் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும்திருப்திகரமாக உள்ளன.  பெண்களின் உரிமைகள் குறித்துஆன்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவிகள் தங்கள் வீடுகளில்உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.  இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில்நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடுசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள்குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்றவேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி–விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத்மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்–செயலருமானதிரு.செ,உதயகுமார் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்துநடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின்ஒரு பகுதியாக நடத்தப்பட்ட  ஆன்லைன் பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில்28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்தியஅகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும்புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணுமற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர்க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுபரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசைசி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ்.ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர்திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன்மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார் Read More

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி மறைவிற்கு,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ, ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.  இன்று (01.09.2021) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல் Read More

டீ கடையில் மணமகள் தேவை பதாகை

கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனம் திறந்த உன்னி கிருஷ்ணன், …

டீ கடையில் மணமகள் தேவை பதாகை Read More

‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் இல்லத் திருமண விழா; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து!

திருச்சி, செப்டம்பர். 1: ‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் மற்றும் ‘பெங்களூரு’ தாவூத் ஜாஹிர் ஆகியோரது இல்லத் திருமண விழா, ஆகஸ்ட். 22ந் தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி …

‘அப்துல்லா மோட்டார்ஸ்’ ஜாஹிர் ஹுசைன் இல்லத் திருமண விழா; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து! Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று (31.08.2021 – செவ்வாய்க்கிழமை)கட்சியின் தலைமை அலுவலகத்தில் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் தலைமையில்இயக்கத்தின் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி, நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு, இயக்கத்தின்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக S.குருமூர்த்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக கார்த்திக்கும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. பொருளாளர் .A.N.சுந்தரேசன் முன்னிலையில், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம்  ஏற்பாட்டில், விழுப்புரம் மண்டல அமைப்புச் செயலாளர் செந்தில்முருகன், அரசியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் ஆகிய மாநில நிர்வாகிகளும், வட சென்னைமேற்கு R.எட்ராஜா, தென் சென்னை மத்தியம் கிண்டிதிரு.இரா.வேணு, மத்திய சென்னை மத்தியம் புரசைதிரு.D.நாகப்பன், திருவள்ளூர் வடக்கு மணலிதிரு.M.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்குதிரு.M.A.ஆண்டனி, வட சென்னை கிழக்கு ராயபுரம்திரு.K.விஜயன், செங்கல்பட்டு தெற்கு திரு.A.பொன்வேல், செங்கல்பட்டு கிழக்கு தையூர் ரமேஷ், விழுப்புரம் கிழக்குதிரு.கோ.தசரதன், விழுப்புரம் வடக்கு திரு.G.ஆறுமுகம் கடலூர்தெற்கு திரு.சூர்யபிரசாத், திருவள்ளூர் மேற்கு திரு.சந்தனக்குமார், திருவள்ளூர் கிழக்கு திரு.G.K.பெருமாள் ஆகிய மாவட்டச்செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா Read More