தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு
கொரோனா நோய்த் தொற்று பரவலைக்குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குநடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்றுகாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்துகட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்டசெயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து • திரையரங்குகள் • அனைத்து மதுக்கூடங்கள் • நீச்சல் குளங்கள் • பொது மக்கள் கலந்து கொள்ளும்சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரநிகழ்வுகள் • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் • உயிரியல் பூங்காக்கள் • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகதிருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். …
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு Read More