காரில் கடத்திச் சென்ற நபரை மீட்ட காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், T-15 SRMC போக்குவரத்துகாவல் நிலைய தலைமைக் காவலர்கள் P.லிங்ககுமார்(த.கா.35800) மற்றும் M.பேச்சிமுத்து (த.கா.26828) ஆகியோர் கடந்த 06.07.2021 அன்று இரவு சுமார் 9.15மணியளவில் போரூர் செட்டியார் அகரம் சிக்னலில்போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த  TN 12 AF 1983பதிவு எண் கொண்ட Swift Tour காரிலிருந்த ஒருவர்,போலீசாரை கண்டதும் காப்பற்றுங்கள் என கூறிகத்தியுள்ளார். சுதாரித்துக்கொண்ட போக்குவரத்துதலைமைக்காவலர்கள் லிங்க குமார், பேச்சி முத்து ஆகியஇருவரும் மேற்படி காரை வழிமறித்து மடக்கி பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் ரியாஷ் அலி, வ/39, த/பெ.சையதுஇப்ராஹிம், எண்.4, ஐசக் நகர், பட்டூர், மாங்காடுஎன்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே  சென்று கொண்டிருந்தபோது, மேற்படி காரில் வந்த 3 நபர்கள், ரியாஷ் அலியைகாரில் வலுக்காட்டாயமாக ஏற்றி கடத்தி வந்ததுதெரியவந்தது. அதன் பேரில் ரியாஷ் அலியை போலீசார்பத்திரமாக கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர். கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து  T-15  SRMC  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். T-15 SRMCகாவல் நிலைய போலீசார் கடத்தல் சம்பவம் நடைபெற்றஇடம் T-14 மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றவாளிகள் மூவரையும் T-14 மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில்பிடிப்பட்ட நபர்கள் 1.ராஜா, வ/31, த/பெ.கோபால், எண்.106, சின்னாண்டிபட்டி கிராமம், காளையாபட்டி அஞ்சல், கரூர்மாவட்டம் 2.சுரேஷ், வ/38, த/பெ.தேவராஜ், எண்.25, நாகாத்தம்மன் தெரு,எம்.ஜி.ஆர் நகர், சென்னை கார்ஓட்டுநர் 3.சரவணன், வ/42, த/பெ.மாரிமுத்து, எண்.8, வள்ளுவர் தெரு, வீரராகவபுரம், மேல்பாக்கம், சென்னைஎன்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கத்தி, 1 இரும்புராடு, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கடத்தப்பட்ட ரியாஷ் அலி,தனது நண்பரான தர்மராஜா என்பவரிடமிருந்து கடன்வாங்கிய ரூ.30,000/-ஐ திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜா  தனதுநண்பர்களான ராஜா, சுரேஷ், சரவணன் ஆகியோர்உதவியுடன் ரியாஷ் அலியை கடத்தி கடன் தொகையைதிரும்ப கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள தர்மராஜாவைதனிப்படை போலீசார்  தீவிரமாக தேடிவருகின்றனர்.      பணியில் விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்திசெல்லப்பட்ட நபரை மீட்டு                   …

காரில் கடத்திச் சென்ற நபரை மீட்ட காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். …

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Read More

கே.பாலசந்தர் பிறந்த நாள் விழா

திரு பாலசந்தருடன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடையில் பயணித்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் – (Alphabetical order) – அஜயன் பாலா (எழுத்தாளர்), ஏ ஆர் முருகதாஸ் (இயக்குனர்),  கே பாக்யராஜ் (நடிகர் …

கே.பாலசந்தர் பிறந்த நாள் விழா Read More

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு,வடக்கு மாவட்டங்களில் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தஞ்சை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் என் அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா …

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு Read More

இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்த நாள்

இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு  வைகோ எம்பி சார்பில் துனைப்பொது செயலாளர் மல்லை சத்யா மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.  உடன் மாசெ வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி கழக குமார் மற்றும் குரோம்பேட்டை நாசர் எம்ஜிஆர் நகர் …

இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்த நாள் Read More

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன்

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில …

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ

பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ Read More