குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமன்ற தீர்மானத்தைப் போன்று தமிழகத்திலும் திமுக அரசு நடப்பு …

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு

ஆலயங்கள் திறக்க 25 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டம்  நடைபெறும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை …

ஆலயங்களை திறக்க கற்பூரம் ஏற்றி போராட்டம் – இந்து முன்ன்ணி அறிவிப்பு Read More

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், …

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின் Read More

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில்அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின்கீழ்  2021-2022 ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய்ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.  வட்டாட்சியர்அலுவலகத்தில்  இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்டவருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றுதமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன்இணைக்கப்பட  வேண்டும்.  இதற்கான விண்ணப்பப்படிவம்நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாகரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்.  விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர்அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி  உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும்.  சென்னைமாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சிஇயக்ககம்,  தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்றமுகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம். விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2021.  

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை Read More

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம்

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.01.2021-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணைக்கு பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் …

தமிழக்த்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளது – இந்திய தேர்தல் ஆணையம் Read More

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களைச் சோந்த …

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன் முறையிலிருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Read More

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் …

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு Read More

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, …

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது Read More

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ்

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான்கருத வேண்டும். மூலம்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில்பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகஆளுநரின் உரையை, வளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக்கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட்தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுபெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராகஇருந்த போதே, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லாபணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரானபணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றைஎதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன்பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக்கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல்இருக்க முடியாது. அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்ததயக்கம் நீக்கப்பட்டு, தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்புநடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. அதேசமயம், தமிழகத்திற்குத் தடுப்பூசிவழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறபோக்கையும் காண முடிந்தது. இதையும் எதிர்கொண்டு தடுப்பூசிபோடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழகஅரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பணியில்முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பே, முதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையை, இரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்குவழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழகமுதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல்பரிசு பெற்ற எஸ்தர் ட‡ப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்றபொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவைஅமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். இவர்களதுஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டியகடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியபொறுப்பும் இருக்கிறது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதிவருவாயைப் பெருக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கைதெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம்ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில்பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில்தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. அன்றைய அ.தி.மு.க. ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால்தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறமாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதைஅனைவரும் அறிவார்கள். இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும், அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ​(கே.எஸ். அழகிரி)

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ் Read More