இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் …

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையாவை நியமித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 26-06-2021 அன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, …

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையாவை நியமித்தார் கமல்ஹாசன் Read More

திரையரங்கு பிரதிநிதிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை உதயநிதிஸ்டாலின் வழங்கினார்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் ஆகியோர் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators …

திரையரங்கு பிரதிநிதிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை உதயநிதிஸ்டாலின் வழங்கினார் Read More

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

கொரோனா பெருந்தொற்று ஒன்றியஅரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல்தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில்நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள …

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின் Read More

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனேவிடுதலை செய்ய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில்ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப்பிறந்த “குற்றத்திற்காக”! ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரியகடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்தகுற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோதளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக்காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில்குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக(அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களைஅக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில்அனுப்பி வைக்கலாம். மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ளஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்துமுழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடுஅரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில்கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசுசெய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்றுகூறிக் கொண்டு போராடுகிறார்கள். அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்புமுகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிடவேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம்சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனேவிடுதலை செய்ய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள் Read More

பொருளாதரத்தில் நலிந்த மேடை நடன கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த நலிந்த *ஸ்டேஜ் நடன கலைஞர்கள் -80 பேர்களுக்கு* அரிசி -5 கிலோ, 9 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை 24.06.2021 அன்று விருகம்பாக்கம் பகுதியில் *நடிகை அங்காடி தெரு சிந்து, டேனியல் இருதயராஜ், …

பொருளாதரத்தில் நலிந்த மேடை நடன கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் Read More

வியாபாரி முருகேசன் மீது போலீஸ் தாக்குதல் கொடூரத்தின் உச்சமென கண்டித்தார் சரத்குமார்

சேலம் மாவட்டம் இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் வியாபாரியான முருகேசன்  ஊரடங்கு விதிகளை மீறி நண்பர்களுடன் சேர்ந்து மது  அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் சிக்கியதில், ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் …

வியாபாரி முருகேசன் மீது போலீஸ் தாக்குதல் கொடூரத்தின் உச்சமென கண்டித்தார் சரத்குமார் Read More

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களேதடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தைபெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்தபேரறிஞர் அண்ணா அவர்களையும், தனித்தனி ஊரில்பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச்சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்அவர்களையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத்தொடங்குகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கடந்த 21 ஆம் தேதி, இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின்நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய  நல்லதோர் உரையைஆற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசின்முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்டநிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாண்புமிகு ஆளுநர் அவர்களது உரை மீதானவிவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றிதெரிவித்து, எனது உரையைத் தொடங்கும்அதேவேளையில், என்னை இந்த மாமன்றத்திற்குத்தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய கொளத்தூர்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், திராவிடமுன்னேற்றக் கழகம் பெற்ற மகத்தான வெற்றிக்குக்காரணமான அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும், தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழமைக்கட்சியினருக்கும், பெரும் எதிர்பார்ப்புகளுடன்தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும்வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்துவழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டுமக்களுக்கும், முதற்கண் என்னுடைய நன்றியையும்,வணக்கத்தையும் இந்தத் தருணத்தில்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர்”என்ற இந்த அரியஆசனத்தைப் பார்க்கும்போதும், அதிலேஅமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்தஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த வரலாற்றைப்படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச்சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன. குறிப்பாக, திராவிட இயக்கத்தின்முன்னோடியான நீதிக் கட்சி, 1920 ஆம் ஆண்டு முதல்1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள்தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூகநீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழிஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கானஉரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப்பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில்சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாயமாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூகநீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின்இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்டஅதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில்எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும்நிறைவேற்றிய கட்சி.  திராவிட இயக்கத்தின் தாய்க்கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில்ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள்கடந்துவிட்டது.   அன்றைக்கு இருந்த மிகக் குறைவானஅதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரிஉரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டியலினமக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி;திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி;அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்குவந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.   தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும்போட்ட சமூகநீதி – சமத்துவ சமுதாயம் காணும்அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றையதி.மு.க. ஆட்சி.  1967 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக்கழகம் அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின்தொடர்ச்சிதான் இந்த ஆட்சி” என்று பேரறிஞர்அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதேவழியில்,எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான்என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.     நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர்கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சிநான்! ஏன், இந்த அரசு!  தமிழினத்தை நம்மால்தான்வாழ வைக்க முடியும் – தமிழினத்தை நம்மால்தான்வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடுதி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமதுதொலைநோக்குப் பார்வையைத்தான் மாண்புமிகுஆளுநர் அவர்கள் தமது உரையில் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.   அன்று நீதிக்கட்சியின் முதலாவது (First Prime Minister) பிரதம அமைச்சராக இருந்த கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், காங்கிரஸ்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தபெருந்தலைவர் காமராஜர் அவர்கள், திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தி, முதலமைச்சராக இருந்தபேரறிஞர் அண்ணா அவர்கள், 5 முறை முதலமைச்சர்பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்தசாதனைச் செல்வர், நம்முடைய முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள்  ஆகியோரையும், முதலமைச்சராகஇருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும், இந்த நேரத்தில் நினைவுகூர்வது என்னுடைய கடமைஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வதுஎன்பது, தமிழர் பண்பாட்டின் தவிர்க்க முடியாதமுக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.   கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திராவிடமுன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசியகாங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதாகட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழகவாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 மாண்புமிகு உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்திஇங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றியஉங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்குநீங்கள் சொல்லும் ஆரோக்கியமானஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.  ஏனென்றால் நான் பேரறிஞர் அண்ணாவினுடையஅரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞருடையகொள்கை வாரிசு. சட்டமன்ற உறுப்பினர்கள்பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள் – தொகுதிசார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்துநிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலேதெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசுஇது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் – கொள்கைகள் – கோரிக்கைகள் ஆகியஅனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமேமுழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரைஎன்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கைவிளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின்ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும்அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒருமுன்னோட்டம்தான். அனைவருக்கும் எளிதில்புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு“ட்ரெய்லர்”மாதிரி.  “முழு நீளத் திரைப்படத்தைவிரைவில் வெள்ளித்திரையில் காண்க” – என்றுமுன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்தஅரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ளஉள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக்களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் – அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் எனஅனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலேவைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாகஇடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். …

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார் Read More

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது

காவல்துறையின் அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாய்க்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறை இளம் ஆய்வாளர் …

காவல்துறையின் அத்துமீறலை தடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது Read More

ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்னசொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள்சொல்கிறோம்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக்கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான்உள்ளது.  India, that is Bharat, shall be a Union of States” என்றுதான் இருக்கிறது. அதைத்தான்பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததைநாங்கள் பயன்படுத்தவில்லை.  ‘ஒன்றியம்’ என்பதுதவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, …

ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் Read More