ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறானகொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம்அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின்அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின்வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் இவற்றின் பங்கு40 சதவீதமாகவும் இருந்தது. அதோடு90 சதவீதம் அமைப்புசாராதொழிலாளர்கள்  பணியாற்றி வந்தனர். இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.  கொரோனாவின் இரண்டாவது அலையின் போது குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைநிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. இரண்டாவது அலைதொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்தநிறுவனங்கள் மேலும் சீரழிவைச் சந்தித்தன. முதல் அலையின் போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால்அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லை. அதேபோல, இப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்ததரவுகளோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லை. இந்தியாவில் குறு, சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாகவும், இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித் திட்டத்தை மத்திய அரசுஅறிவித்தது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும்மூடப்பட்ட வருவதால், பலரும் வேலை இழந்து வருகின்றனர். உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ 3 லட்சம் கோடியை இந்தநிறுவனங்களுக்கு வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசுஅறிவித்தது. ஆனால், அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லை. நாடுமுழுவதும் 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்டவை 25 லட்சத்து 13 ஆயிரம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 60 சதவீதம்தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள்கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு கைவிட்டதால், தமிழகத்தில் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டைநிறுத்தியுள்ளன. 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள்மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பலதிட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன்இணைந்து செயல்படுத்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தநிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம்பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுமீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைஅணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (கே.எஸ். அழகிரி)

ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலை பரவல் விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கொரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. …

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ. Read More

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர், அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை …

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது Read More

கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 5 லட்சம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலினை 28-06-2021 அன்று சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர், முதன்மைத் …

கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 5 லட்சம் வழங்கியது Read More

BVK தொழில் குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25,00,000 காசோலை வழங்கியது .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் கே. வி.பாலா சந்தித்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர். மேலும் …

BVK தொழில் குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25,00,000 காசோலை வழங்கியது . Read More

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் புல எண் 5/2 – 1.49 ஏக்கர் மற்றும் புல எண். 6/3 – 0.58 ஏக்கர் என மொத்தம்ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் நிலத்தில் பல வருடங்களாக11 நபர்களால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு இந்து சமய …

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம் Read More

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

காவிரி உரிமை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது : “வணக்கம்! தாங்கள் 24.06.2021 …

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! Read More

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் இன்று  (27.6.2021) ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் திரு.என். ராம், மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் திருமதி லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் திருமதி இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் …

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள் Read More

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட …

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார் Read More