COP gave mask to public at stanley hospital, Royapuram

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 24.05.2020 அன்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி முககவசங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து காவல் ஆணையாளர் அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இராயபுரம், ஆஞ்சநேயா நகர் 5வது சந்து, காசிமேடு, ஜீவரத்தினம் நகர் 3 வது தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பொதுமக்கள் அதிகளவில் கூடாமல் எவ்வாறு தடுப்பது போன்றவற்றை பற்றி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து முககவசங்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது இணை ஆணையாளர் (வடக்கு) திரு.கபில்குமார்சரத்கர், இ.கா.ப உடனிருந்தார்.