COP welcoming DC Anna nagar & 2 pcs for return back from Corona

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 25.5.2020 பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்களின் உதவி காவலர் மற்றும் வாகன ஓட்டுநர்/காவலர் ஆகியோரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹாஇ.கா.ப., (தெற்கு), திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., (தலைமையிடம், பொறுப்பு-வடக்கு கூடுதல் ஆணையாளர்), மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமாரி,இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் திரு.பி.பகலவன்,இ.கா.ப., (அடையாறு), திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), திரு.எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு), திரு.கே.ராஜேந்திரன் (மத்திய குற்றப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.