சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையின் சேவையைமேம்படுத்துவதற்காகவும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்குவிரைந்து சேவைகளை வழங்குவதற்காகவும் இவ்வரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.59.73 கோடிமதிப்பீட்டில் 202 நான்கு சக்கர மற்றும் 81 இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்துகாவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது.

 2023-24ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், மாநிலத்திலுள்ள காவல்துறைஅதிகாரிகளுக்கு முக்கியமாக, சரக எல்லைக்குட்பட்ட மிக முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணி, சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பவங்கள், குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுஉள்ளிட்ட பல்வேறு முனைகளில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கழிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு ஈடாக 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.

 அந்த அறிவிப்பிற்கிணங்க, அவ்வாகனங்களிலிருந்து பெருநகர சென்னை காவல் துறையின்பயன்பாட்டிற்காக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப்வாகனங்களின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

 இதன்மூலம், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் குற்றங்களை களையவும், போக்குவரத்தைஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கினை சிறந்த முறையில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு, குறிப்பாகபெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிடவும், இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். மேலும், இவ்வாகனங்களிலிருந்து சென்னை பெருநகர காவல்துறையின் காவல் துணை ஆணையாளர்கள், காவல் உதவி ஆணையாளர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக சில வாகனங்கள்வழங்கப்படும்.

 இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ..., உள், மதுவிலக்கு  மற்றும்ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் பெ. அமுதா, ..., காவல்துறை தலைமை இயக்குநர்சங்கர் ஜிவால், .கா.., சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.