காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது;

காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்டஎட்டு டெல்டா மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 11)  முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்த விவசாயசங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.. கட்சி முழு ஆதரவுஅளிப்பதோடு, கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக வழியில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாகநடத்தப்படும்  போராட்டத்துக்கும் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த போராட்டத்தில்எஸ்.டி.பி.. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எஸ்.டி.பி.. கட்சி விவசாய அணியினர் திரளாககலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.